×

அம்புக்கோவில் கிராமத்தில் தைல மரக்காட்டில் திடீர் தீ

கறம்பக்குடி, ஆக.4: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி. விவசாயி. இவருக்கு சொந்தமாக தைல மரக்காடு உள்ளது. இந்த தைல மரக்காட்டில் நேற்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ முழுவதும் எரிவதற்குள் தீயை அனைத்து கட்டுப்படுத்தினர்.

The post அம்புக்கோவில் கிராமத்தில் தைல மரக்காட்டில் திடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Thala tree forest ,Ambukovil ,Karambakkudi ,Thenmozhi ,Ambukovil village ,Pudukottai ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி சாலையில் இயற்கை முறையில் புடலங்காய் சாகுபடி